கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாவில் இந்திய – வங்கதேச எல்லையில் உள்ள சோதனை சாவடியில் கடத்தல்காரர்கள் சிக்கினார். வங்கதேசத்தில் இருந்து வந்த இருவரை பிடித்து சோதனையிட்டதில் ரூ.4 கோடி மதிப்புள்ள 52 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பேருந்தில் தங்கம் கடத்தி வந்த முஸ்தபா, உதவியாளர் மதூர் ரகுமான் அகண்டாவை எல்லை பாதுகாப்புப்படை போலீசார் கைது செய்தனர்.