கரூர்: வருமான வரித்துறையினரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள 15 பேருக்கு ஜாமின் கோரி கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றி பட்டியலிட நீதிபதி இளங்கோவன் பதிவாளருக்கு யூதாவிட்டுள்ளார். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார், உறவினர் வீடுகளில் மே 25-ல் ஐ.டி. சோதனை நடத்தியது. ஜாமினில் விடுவிக்கக் கோரி, 15 பேரும் கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.