புழல்: செங்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று காலை 11மணியளவில் மூன்று வாகனங்களில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் அலுவலகத்தில் வந்தனர். . அதிகாரிகள் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். கடந்த சில நாட்களாக செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவுகள் அதிக அளவில் நடந்ததாகவும் இதனால் இந்த சோதனை நடைபெற்றது. இதில்ல் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாகவும் ஆவணங்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 5 மணி நேரம் சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.