டெல்லி: வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வருமான வரி செலுத்துவதற்கான வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. நேர்முக வரி, மறைமுக வரி என எந்த வரிவிதிப்பு முறையிலும் மாற்றம் இல்லை. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 8 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.