புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சந்திர பிரியங்கா நீக்கம் செய்யப்பட்டதற்குபின் புதிய அமைச்சராக காரைக்கால் வடக்கு திருமுருகன் நியமிக்கப்பட்டார். அவர் உடனே பதவியேற்பார் என கூறப்பட்ட நிலையில் புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொடூர மரண சம்பவத்தால் தள்ளிப்போனது. இதனிடையே 11ம்தேதி பதவியேற்கலாம் என தகவல் பரவியது.
அதுவும் மாற்றப்பட்ட நிலையில் தற்போது 14ம்தேதி காலை 10.45 மணியளவில் பதவியேற்க வாய்ப்புள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைதொடர்ந்து சட்டசபையில் புதிய அமைச்சருக்கான அறையை புதுப்பித்து தயார்படுத்தும் பணிகளில் கடந்த சில தினங்களாக முழுவீச்சில் நடைபெற்றன. இவை இறுதிவடிவம் பெற்ற நிலையில் ேநற்று அந்த அறையில் யாகம் நடத்தப்பட்டது. இதில் புதிய அமைச்சர் திருமுருகன் தனது மனைவி சுசரிதாவுடன் கலந்து கொண்டார்.