மும்பை வாங்கடே அரங்க வளாகத்தில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் சிலை நேற்று திறந்துவைக்கப்பட்டது. இவ்விழாவில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பட்நவிஸ், என்சிபி தலைவர் ஷரத் பவார், பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, துணை தலைவர் ராஜீவ் சுக்லா, பொருளாளர் ஆஷிஷ் ஷிலார், மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர். சச்சின், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர். ஸ்டேடியத்தில் திறந்து வைக்கப்பட்ட சிலை. உள்படம்: சிலையின் மாதிரி வடிவத்துடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் சச்சின்.