Friday, May 17, 2024
Home » உடல் எடை குறைந்து வருவதால் இம்ரான் உயிருக்கு ஆபத்து: கோர்ட் தலையிட மனைவி கோரிக்கை

உடல் எடை குறைந்து வருவதால் இம்ரான் உயிருக்கு ஆபத்து: கோர்ட் தலையிட மனைவி கோரிக்கை

by Neethimaan

 

இஸ்லாமாபாத்: தோஷகானா ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அட்டோக் சிறையில் உள்ள இம்ரான் கானை அவரது மனைவி புஷ்ரா பீவி சில நாட்களுக்கு முன் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் தனது வக்கீல் மூலம் உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இம்ரான் கானின் உடல் நிலை மோசமாகியுள்ளது. சிறையில் இருக்கும் அவரது உடல் எடை குறைந்து வருகிறது. 70 வயதாகும் நபரின் உடல் எடை குறைந்து வருவது அவரது உயிருக்கு ஆபத்தாகும். எனவே, இம்ரான் கானின் நலனுக்காக உச்சநீதிமன்றம் இதில் தலையிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

13 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi