சென்னை: படத்தில் நடிக்கவிருப்பதால் ஜாமீன் வழங்கக் கோரி யூடியூபர் டிடிஎஃப் வாசன் மனுத்தாக்கல் செய்துள்ளார். டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெறவிருக்கிறது. ஜூன் 4ம் தேதி முதல் படத்தில் நடிக்கவுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என டிடிஎஃப் வாசன் மனு அளித்துள்ளார். டிடிஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளது என அரசு தரப்பு வாதம் தெரிவித்துள்ளது.