Thursday, May 30, 2024
Home » சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு கள்ளக்குறிச்சி எம்.பி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்: குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கு கள்ளக்குறிச்சி எம்.பி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்: குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

by Karthik Yash

சென்னை: தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011ம் ஆண்டுகளில், தமிழக அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தி இருவரிடம் விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு 12வது கூடுதல் அமர்வுகூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கவுதம சிகாமணி எம்.பி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கபட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணை டிச. 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

two × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi