சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆர்.சுப்பிரமணியம் விலகி உள்ளார். வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.