Sunday, May 19, 2024
Home » இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் மாவீரன் படக்காட்சிகளை மாற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் மாவீரன் படக்காட்சிகளை மாற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

by Suresh

சென்னை: இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்காத வகையில் மாவீரன் படக்காட்சிகளை மாற்ற வேண்டும் எனவும் கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் மற்றும் அதிதிசங்கர் நடிப்பில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. நாளை மறுநாள் 750க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மாவீரன் படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற உள்ள காட்சியில் இந்திய ஜனநாயக கட்சியின் கொடியை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனால் கொடியின் நிறத்தை மாற்ற வேண்டும் என இந்திய ஜனநாயக கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கொடியின் நிறத்தை மாற்றாமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்திய ஜனநாயக கட்சியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் வரும் எதிர்மறையான கதாபாத்திரத்தில் கட்சியின் கோடி மற்றும் சின்னத்தை பயன்படுத்தியிருப்பதால் பொதுமக்களிடையே தங்களுக்கு தவறான பிம்பம் ஏற்படுவதாகவும், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டு படத்தில் வரும் காட்சியில் கொடியின் வண்ணத்தை மாற்ற வேண்டும் என வாதிட்டார்.

பின்னர் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தில் வரும் காட்சியில் பயன்படுத்தப்பட்டிருப்பது இந்திய ஜனநாயக கட்சியின் கொடி இல்லை எனவும் நிறங்கள் வேறானது எனவும் தற்போது படத்தை தடை செய்தால் ஏராளமான நஷ்ட்டம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வான்தங்களையும் கேட்டறிந்த நீதிபதி, படத்தில் 40 நொடிகள் பொறுப்புத்துறப்பை வெளியிட வேண்டும் எனவும் அதில் இக்காட்சியில் இந்தியாவில் எந்த கட்சியையும் குறிப்பிடவில்லை என்ற வாக்கியத்தையும் இடம்பெற செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இத்திரைப்படம் திரையரங்குகளுக்கு பிறகு கொடியின் நிறத்தில் மாற்றங்களை செய்த பின்னரே ஓடிடி மற்றும் சாட்டிலைட் சேனல்களில் வெளியிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

16 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi