சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் தற்கொலை தொடர்பாக விசாரணை செய்ய, ஓய்வு பெற்ற டி.ஜி.பி திலகவதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் தொடர்ந்து பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த நிலையில், கடந்த மார்ச் 31ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் ஜெயின் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவரது கைடு தான் காரணம் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து சென்னை ஐஐடி நிர்வாகம் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று மாணவன் மரணம் தொடர்பாக விசாரிக்க குழு அமைப்பதாக ஒத்துக்கொண்டது. தற்போது ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள், ஐ.ஐ.டி. பேராசிரியர் மற்றும் மாணவன் என 5 பேர் உள்ளனர்.