புதுடெல்லி: டெல்லியில் நடந்த நியாய் சங்கல்ப் சம்மேளன பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றார். அப்போது பேசிய கார்கே, ‘‘ராகுல் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழை மக்களின் நீதிக்காக போராடுகிறார்.
இந்த போராட்டமானது ஜனநாயகத்தையும், நாட்டின் அரசியலமைப்பையும் காப்பாற்றுவதற்கான போராட்டமாகும். இந்த போராட்டம் தோல்வியடைந்தால் மக்கள் மோடி அரசின் கீழ் பாதிக்கப்படுவார்கள். இந்த போராட்டத்தில் நீங்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க தவறினால் நீங்கள் மோடியின் அடிமையாகிவிடுவீர்கள்” என்றார்.