சென்னை: ஐஎஃப்எஸ் நிதி மோசடி வழக்கின் புதிய விசாரணை அதிகாரியாக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே விசாரித்து வந்த டிஎஸ்பி கபிலன், ரூ.32 லட்சம் லஞ்சம் வாங்கியதால் விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கபிலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து ஐஎஃப்எஸ் வழக்கை விசாரிக்க கார்த்திக்கை டிஜிபி நியமித்தார். தூத்துக்குடி காவலர் பயிற்சி கல்லூரி கூடுதல் கண்காணிப்பாளரான கார்த்திக்கை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.