சென்னை: பிரபல நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார். காவல் நிலையத்தில் ஆஜரானது தொடர்பாக தவறான தகவல்களை அளித்ததற்காக இளவரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டை சுமத்திய விவகாரத்தில், கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என கோர்ட் எச்சரிக்கை விடுத்தது. நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம், டிசம்பர் 12ல் காவல் நிலையத்தில் ஆஜரானதற்கான ஆதாரங்கள் உள்ளன. உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இளவரசு மன்னிப்பு கேட்டார்.