சென்னை: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க பழனிசாமிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கார்த்திகைபாலன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு மேத்யூ சாமுவேல் மீது 2019 ல் பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.