ஐதராபாத் : கடும் வெயில் காரணமாக ஐதராபாத்தில் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பேருந்து சேவை குறைக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் நலன் கருதி, மறு அறிவிப்பு வரும் வரை குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவை குறைக்கப்படுவதாக ஐதராபாத் போக்குவரத்து நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.