மதுரை: காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தரக் கோரி மனைவி தொடர்ந்த மனு அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் முகாந்திரம் இல்லையென கூறி ரூ.10ஆயிரம் அபராதத்துடன் வழக்கை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. வருசநாடு காவல்நிலைய தலைமை காவலர் அழகுமுருகன் 2015 முதல் காணாமல் போனதாக மனைவி கலாதேவி மனுத்தாக்கல் செய்திருந்தார். 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எனது கணவரை கண்டுபிடித்து தரவில்லை என மனுதாரர் கலாதேவி குறிப்பிட்டிருந்தார்.