ஸ்ரீநகர்: பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் இடங்களை விற்பனை செய்து ஜம்முவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி உதவி அளித்ததாக இடைத்தரகர்கள் மன்சூர் அகமது ஷா மற்றும் அல்தாப் அகமது பட்ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஹுரியத் தலைவர் முகமது அக்பர் பட், ஸ்ரீநகரைச் சேர்ந்த பாத்திமா ஷா மற்றும் அனந்த்நாக்கைச் சேர்ந்த சப்சார் அகமது ஷேக் ஆகியோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.