வத்திராயிருப்பு, ஏப்.25: வத்திராயிருப்பு ராமசந்திரபுரம், குன்னூர் கீழக்கோபாலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணியளவில் இருந்து ஒருமணி நேரத்திற்கு மேலாக பயங்கர இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் ஆறாக தண்ணீர் ஓடியது. கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்தது. வயல்களில் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். வத்திராயிருப்பின் மழையின் அளவு 25.8 மில்லிமீட்டர், பெரியார் அணையில் 30.2 மில்லிமீட்டர், கோவிலாறு அணையில் 4.2 மில்லிமீட்டர் மழை பதிவானது.