கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அத்திப்பள்ளி வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. தமிழக – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பட்டாசு கடை விபத்தில் 15பேர் இறந்த நிலையில் மேலும் ஒருவர் பலியானார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 14 பேர் நிகழ்விடத்திலேயே இறந்த நிலையில் நேற்று சிறுவன் தினேஷ்(17) மருத்துவமனையில் உயிரிழந்தார்.