தேனி: போடி அருகே பாயசத்தில் விஷம் கொடுத்து சிறுமியை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஷம் கொடுத்து கொலை செய்ய உதவிய விஜி என்ற விஜயாரம் என்பவருக்கு 10ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012ல் ராம்குமார் கடனாக கொடுத்த ரூ.4.7லட்சம் பணத்தை திருப்பிக் கேட்டதால் சுரேஷ் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளனர். ரூ.4.7 லட்சம் பணத்தை திருப்பிக் கேட்டதால் பாயசத்தில் விஷம்
வைத்துக் கொல்லத் திட்டமிட்டனர். அதில் சிறுமி சௌந்தர்யா (11) இறந்த நிலையில் தந்தை ராம்குமார், தாய் செல்வி ஆகியோர் உயிர் பிழைத்தனர்.