புளோரிடா: ஹாலிவுட் நடிகை சிண்டி மோர்கனின் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வந்த ஹாலிவுட் நடிகை சிண்டி மோர்கன் (69), அவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது வீட்டில் தங்கியிருந்த மற்றொரு நபர், வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவை தட்டினார். ஆனால் வீட்டின் கதவு உள்தாழிட்டு பூட்டப்பட்டிருந்ததால் திறக்க முடியவில்லை.
தகவலறிந்த பாம் பீச் கவுண்டி ஷெரிப் போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சிண்டி மோர்கன் இறந்த நிலையில் கிடந்தார். மேலும் அவரது சடலத்தில் துர்நாற்றத்துடன் அழுகிய நிலையில் இருந்தது. மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரித்து வரும் போலீசார், அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 1979ல் முதல் முறையாக அப் யுவர்ஸ் என்ற படத்தில் நடித்த சிண்டி மோர்கன் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து சாதனை படைத்தார். இவரது மரணம் ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.