பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத்தை போற்றும் தசரா விழா மைசூரு மாநகரில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா விழாவை தொடங்கி வைக்கிறார். தசரா விழா நாளை காலை தொடங்குகிறது. காலை 10.15 மணி முதல் 10.36 மணிக்குள் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்யப்படுகிறது. வரும் 24ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க யானை ஊர்வலம் நடக்கிறது.