டெல்லி : ஹிண்டன்பர்க் அறிக்கை வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் உண்மை வென்றுவிட்டது என்று கவுதம் அதானி கருத்து தெரிவித்துள்ளார். தங்களுக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தொழிலதிபர் கவுதம் அதானி செய்தி பதிவிட்டுள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு எங்களது பணிவான பங்களிப்பு தொடரும் எனவும் கவுதம் அதானி உறுதி அளித்துள்ளார்.