இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் 2 பேர் உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தில் சோழன், ஹமிர்பூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று நிகழ்த்த மேகவெடிப்பின் காரணமாக அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் விளை நிலங்கள், வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பராசர் என்ற இடத்திற்கு பேருந்தில் சுற்றுலா சென்ற மாணவர்கள் திரும்பி வரும் போது சாலைகள் நீரில் அடித்து செல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். குள்ள மாவட்டத்தில் உள்ள மோகல் என்ற கிராமத்தில் டிராக்டர்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன.
காங்க்ரா தாலுகாவில் உள்ள தண்ட அரசு கல்லூரி மருத்துவமனைகுள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிப்பட்டனர். சிர்மார், மாண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை கொட்டி தீர்த்ததால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சாலைகளிலும் மழை நீர் பெருக்கு எடுத்து ஓடியது. கனமழை காரணமாக மாண்டி தேசிய நெடுஞ்சாலை மாண்டி ஜோதிந்தார் நகர் நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக இமாச்சலப் பிரதேசம் அரசு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.