சென்னை: ஹிஜாவு நிதி நிறுவன மோசடியால் ஏமாந்தவர்களின் 5,000 பேரின் பட்டியல் ஒப்படைக்கப்பட்டது. 150 பேர் திரண்டு சென்று பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தனர். ஹிஜாவு மோசடி வழக்கில் 52 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு, 162 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 89,000 முதலீட்டாளர்களிடம் 4,400 கோடி ரூபாய் வரை மோசடி எனப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.