சங்கரன்கோவில்: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வரும் 6ம் தேதி பாதயாத்திரைக்காக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வருகிறார். இதையொட்டி சங்கரன்கோவில் – புளியங்குடி செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை பாலத்தின் சுவரில் அனுமதியின்றி பாஜவினர் விளம்பரம் செய்திருந்தனர். இதை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அழித்தனர். அப்போது அங்கு வந்த பாஜ சங்கரன்கோவில் நகர இளைஞர் அணி பொறுப்பாளர் விக்னேஷ், நகர தலைவர் கணேசன் இருவரும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சுப்பிரமணியன் என்ற பணியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பணியாளர் காயம் அடைந்த நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில், பாஜ நிர்வாகிகள் கணேசன், விக்னேஷ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட பாஜ நிர்வாகிகள் கைது
previous post