Sunday, May 19, 2024
Home » பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரருக்கு விலக்களிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரருக்கு விலக்களிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

by Arun Kumar

சென்னை: பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரருக்கு விலக்களிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்களுக்கு விலக்களிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. காலியாக உள்ள 2,582 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டனர். 2023 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-ல் ஒரு அரசாணையை வெளியிட்டது. இதன்படி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 2010 ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று கூறி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு பிறப்பித்தார்

ஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்து வதற்காக இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும் இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களுக்கு பொருந்தாது என்று கூறியுள்ளது என்பதை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம். அதற்காக அந்தப் பள்ளிகளின் தன்மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது.

இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர் தேர்வில், கட்டாய தமிழ் தேர்வில் இருந்து மொழி சிறுபான்மை விண்ணப்பதாரருக்கு விலக்களிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

 

You may also like

Leave a Comment

5 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi