சென்னை: நீதிமன்றங்களில் தலைவர்கள் படம் வைக்க புதிய கட்டுப்பாடு; உயர்நீதிமன்ற பதிவாளர் ஆணையை திரும்பப் பெறுக என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். நீதிமன்றங்களில் திருவள்ளூர், காந்தி படங்கள் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல உயர்நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை வைக்க வழக்கறிஞர்கள் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளனர். ஐகோர்ட் உத்தரவால் ஆலந்தூர் நீதிமன்ற வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் உருவச்சிலை அகற்றப்பட்டுள்ளது. திருவள்ளூர், காந்தி படங்கள் வரிசையில் அம்பேத்கர் படமும் இடம்பெற அனுமதிக்குமாறு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.