டெல்லி: 2 ஆண்டு சிறைதண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் இன்று விசாரணைக்கு வருகிறது. ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது.