ஓமலூர்: சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே செம்மண்கூடல் ஊராட்சியில் கந்தம்பிச்சனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 128 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக, வாழப்பாடி சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (58) என்பவர், பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட 3 மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீசார் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.