சென்னை யானைக் கவுனியில் வாகன தணிக்கையின்போது ரூ.15 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது முஸ்தாக்(38) என்பவரிடம் இருந்து ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமானவரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு முகமது முஸ்தாக்கிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.