சோனிபட்: ஹரியானாவில் சோனிபட் மாவட்டத்தில் விவசாயிகளுடன் இணைந்து ராகுல் காந்தி நாற்றுகளை நடவு செய்தார். டெல்லியில் இருந்து சிம்லா செல்லும் வழியில் ஹரியானாவில் சோனிபட்டில் விவசாயிகளை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். டிராக்டர் ஓட்டி நிலத்தை உழுத ராகுல் காந்தி, விவசாயிகளுடன் சேர்ந்து நடவுப் பணியிலும் ஈடுபட்டார்.