புதுடெல்லி: பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் நேற்று தனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘அனைவருக்கும் 2024ம் ஆண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவருக்கும் செழிப்பு, அமைதி மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்’’ என்று கூறியுள்ளார். முன்னதாக, தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 2024ம் ஆண்டிலும் கடந்த ஆண்டின் தன்னம்பிக்கை உணர்வை தொடர வேண்டுமென வலியுறுத்தினார்.