Monday, June 17, 2024
Home » கூந்தல் ஆரோக்கியம் தரும் பால், வாழை, நெய்!

கூந்தல் ஆரோக்கியம் தரும் பால், வாழை, நெய்!

by Porselvi
Published: Last Updated on

கூந்தலின் ஆரோக்கியம் கெட்டுப் போவதைக் கண்டு பதற்றமடைந்து மார்க்கெட்டில் விற்கப்படும் முடி சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதை பொதுவாக பார்க்க முடிகிறது. மார்க்கெட்டில் கிடைக்கும் பொருட்கள் மட்டுமின்றி, சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கூந்தலில் பயன்படுத்துவதன் மூலமும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

அதில் பிரதான 3 பொருட்கள் மற்றும் அதன் விவரங்கள் இதோ.

பால்: குளிர்காலத்தில் பாலை முடிக்கு தடவுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. NCBI அறிக்கையின்படி பாலில் அதிக புரதம் உள்ளது. கேசீன் என அழைக்கப்படும் புரதம் பாலில் இருப்பதால் இது முடியை மென்மையாக்குவது மட்டுமல்லாமல் அதை வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகிறது. மறுபுறம் பாலில் கால்சியத்தின் அளவும் மிக அதிகமாக இருப்பதால் இது முடி வளர்ச்சியை மேம்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது.பாலில் வைட்டமின் டி உள்ளது. இது புதிய முடிகளின் வளர்ச்சிைய ஊக்குவிக்கிறது. இதனால் புதிய முடி உற்பத்தியாகிறது. பாலில் வைட்டமின் ஏ, பி6 மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.நீங்கள் பாலை நேரடியாக தலை முடிக்கு பயன்படுத்தலாம். உங்களின் முடி எண்ணெய்ப் பசையாக இருந்தால் பச்சைப் பாலுக்கு பதிலாக கொதிக்க வைத்த பாலை பயன்படுத்தவும். தேன், கற்றாழை போன்றவற்றை பாலில் சேர்த்து பயன்படுத்தினால் அது கூந்தலுக்கு கூடுதல் பலனை தரும்.

வாழைப்பழம்: வாழைப்பழம் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர். இது கூந்தலுக்கு பொலிவைத் தருவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே இதை கண்டிஷனராகவும் பயன்படுத்தலாம்.குறிப்பாக பொடுகு பிரச்னை இருந்தால் வாழைப்பழம் அதை குறைத்து முடியை மென்மையாக்குகிறது. அதுமட்டுமின்றி வாழைப்பழம் முடியின் வெடிப்புகளையும் சரிசெய்கிறது. இதில் இருக்கும் சிறந்த விஷயம் என்னவென்றால் வாழைப்பழம் முடியின் உறுதித்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. குளிர்காலத்தில் உங்கள் தலைமுடி வறண்டிருந்தால் மதிய நேரத்தில் துருவிய வாழைப்பழத்தை தயிருடன் சேர்த்து தலைமுடியில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு ஷாம்பு தேய்த்து குளித்து பாருங்கள். இதன் பலனை பார்ப்பீர்கள்.

நெய்: வீட்டு கிச்சனில் நெய் எளிதில் கிடைக்கும். சுத்தமான பசு நெய்யை முடிக்கு தடவுவதால் பல நன்மைகளை பெறலாம். ஹெல்த்லைன் தளத்தின்படி, நெய்யில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. இது முடியை சீராக்குகிறது. தலைமுடி அதிகம் உதிர்ந்தால் குளிர்காலத்தில் உங்கள் தலைமுடிக்கு நெய் தடவுவது சிறந்த தேர்வாக இருக்கும்.மிகவும் மெல்லிய கூந்தலுக்கு நெய் ஒரு வரப்பிரசாதம். இதனால் தலைமுடி அடர்த்தியாக இருப்பதுடன் கூந்தலும் அடர்த்தியாக தெரியும். உச்சந்தலை பராமரிப்புக்கும் நெய் மிகவும் நல்லது. நீங்கள் நெய்யை நேரடியாகவும் கூந்தலுக்கு தடவலாம். மற்றும் கற்றாழை அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து முடிக்கு சிகிச்சையும் அளிக்கலாம். இது கூந்தலுக்கு பளபளப்பைக் கொண்டுவந்து முடியை மென்மையாகவும் மாற்றுகிறது. ஆனால் எண்ணெய் வைத்த தலையில் நெய்யை தடவக் கூடாது.
– கவிதா பாலாஜிகணேஷ்

You may also like

Leave a Comment

11 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi