Tuesday, May 14, 2024
Home » உடற்பயிற்சியாளரை வெட்டிய 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

உடற்பயிற்சியாளரை வெட்டிய 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

by Karthik Yash

திருவள்ளூர்: திருவாலங்காடு அருகே உள்ள சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி(23). உடற்பயிற்சி கூட பயிற்சியாளர். இவர் மப்பேடு பகுதியில் உடற்பயிற்சி மையம் நடத்திவருகிறார். இவரை, கடந்த 21ம் தேதி இரவு பாலச்சந்தர் உட்பட 5 பேர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த மணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்படி மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் திருவாலங்காடு பகுதியில் நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் மணி தாக்கப்பட்டதாக தெரியவந்தது. மணியை தாக்கியதாக பேரம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாலச்சந்தர்(35), அரக்கோணத்தைச் சேர்ந்தகோகுல்(22) கண்ணன்(24) மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர். இதில் பாலச்சந்தர், கோகுல் கண்ணன் ஆகிய 3 பேரை புழல் சிறையிலும் சிறுவர்கள் 2 பேரை கெல்லீஸ் சிறுவர் காப்பகத்திலும் ஒப்படைத்தனர்.

You may also like

Leave a Comment

11 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi