செய்துங்கநல்லூர்: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாயி. வல்லநாடு கஸ்பா ஊராட்சி 1வது வார்டு உறுப்பினராகவும் உள்ளார். மணல் கொள்ளை தொடர்பாக இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ெதாடர்ந்தார். இதனால் மணல் கொள்ளையர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விவசாய பணிகளை கவனிக்கிறார் பாலகிருஷ்ணன்.