Monday, May 20, 2024
Home » மன்னார் வளைகுடாவில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று!: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதற்கு தடை..!!

மன்னார் வளைகுடாவில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று!: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதற்கு தடை..!!

by Kalaivani Saravanan

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடாவில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் தொழிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது.

இதனால் மீன்பிடி அனுமதி சீட்டை ரத்து செய்ததோடு மீனவர்கள் கடலுக்குள் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மீன்பிடி துறைமுகங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகுகளை நங்கூரமிட்டு மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மேலும் நாள் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

You may also like

Leave a Comment

12 + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi