காந்திநகர்: குஜராத் சோட்டா உதேபூரை சேர்ந்த பழங்குடியின தலைவரான நரண் ரத்வா 5 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரத்வா கடந்த 1989ம் ஆண்டு முதன்முறையாக மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்து வந்த நரண் ரத்வா நேற்று தனது ஆதரவாளர்களுடன் பாஜவில் சேர்ந்தார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் குஜராத்தின் பழங்குடியின தலைவர் பாஜவில் சேர்ந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.