குஜராத்: குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். வணிக வளாகத்தில் பயங்கரமாக கொழுந்து விட்டு எரிந்த தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. விளையாட்டு மையத்தின் உரிமையாளர் மீது வழக்குப் பதிந்து தீ விபத்து குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.