சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி குரூப் 2(நேர்முகத் தேர்வு பதவிகள்) தேர்வுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
அத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியுள்ள தேர்வர்கள், நேர்முகத் தேர்வு பதவிகளில் நிரப்பப்படாத காலிப் பணியிடங்களுக்கு தெரிவித்த விருப்பம் மற்றும் அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்விற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண் கொண்ட பட்டியல், தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது.