Thursday, May 9, 2024
Home » கீரப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த மின்சாரம் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை

கீரப்பாக்கத்தில் குறைந்த மின்னழுத்த மின்சாரம் டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை

by Karthik Yash

கூடுவாஞ்சேரி: கீரப்பாக்கம் ஊராட்சியில் கடந்த பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த பிரச்னை காரணமாக இந்த பகுதி மக்களுக்கு என்று தனி டிரான்ஸ்பார்மர் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு 7000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் கடந்த பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த பிரச்னை தொடர்ந்து நீடித்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டில் விநாயகபுரம், தொட்டி மாரியம்மன் கோவில் தெரு, ஊமை மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட கல் உடைக்கும் ஏழை தொழிலாளர்கள் மற்றும் இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் வீட்டில் உள்ள மின்விசிறிகள், மிக்சி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட பல்வேறு மின்சாதன பொருட்கள் பழுதாகி நாசம் அடைந்து வருகின்றன.

இரவு நேரத்தில் கொசுக்கடி தாங்க முடியாமல் பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்ற தாய்மார்கள், நோய்வாய்ப்பட்டோர், வயதானவர்கள் என அனைத்து தரப்பினரும் தூக்கமின்றி தவியாய் தவித்து வருகின்றோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரியும், இந்த பகுதி மக்களுக்கு என்று தனியாக டிரான்ஸ்பார்மர் அமைத்து தரக்கோரியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கடந்த பல ஆண்டுகளாக மனு கொடுத்து வலியுறுத்தி வருகின்றோம். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்றனர்.

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi