சென்னை: சென்னை செம்மொழிப் பூங்கா எதிரே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.1,000 கோடி நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அண்ணா மேம்பாலம் அருகே உள்ள 110 கிரவுண்டு நிலத்தை தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்துள்ளது. தோட்டக்கலை சங்கத்துக்கு அரசு வழங்கிய நிலம் தனியார் லாபத்துக்காக பயன்படுத்தப்பட்டதால் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 110 கிரவுண்டு நிலத்தையும் கையகப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது