பாட்னா: பீகாரில் கடந்த வாரம் நடந்த அனைத்து அரசு பல்கலைக்கழகங்களுக்கான கல்விதுறையின் கூட்டத்தில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், துணை வேந்தர்களுக்கு ஊதியம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் வங்கி கணக்குகளையும் முடக்குவதற்கு கல்வித் துறை உத்தரவிட்டது. இந்நிலையில் கல்விதுறையின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் வங்கிகளுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.