சென்னை: ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. கிராம சபை கூட்டங்கள் மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக்கூடாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கிராம சபை கூட்ட நிகழ்வுகளை நம்ம கிராம சபை செயலியில் உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்துக்கான செலவின வரம்பை ரூ.5,000 ஆக உயர்த்த தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.