சென்னை: அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஏற்கனவே 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது.