Thursday, May 16, 2024
Home » திருக்கோயில் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

திருக்கோயில் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

by Neethimaan

திருக்கோயில் பயிற்சிப் பள்ளிகளில் வழங்கப்படும் மாத ஊக்கத்தொகை முழுநேர மாணவர்களுக்கு ரூ.4000 ஆகவும், பகுதி நேர மாணவர்களுக்கு ரூ.2000 ஆகவும் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், பிரபந்த விண்ணப்பர், வேத ஆகம பாடசாலைகள் என 15 பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லாமல் பயிற்சியும், ஊக்கத் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.3,000/- மற்றும் பகுதி நேரத்தில் பயிலும் மாணவர்களுக்கு மாத ஊக்கதொகை ரூ. 1500/- வழங்கப்பட்டு வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, ஜூன் 2023 முதல் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி பள்ளிகளில் பயிலும் முழு நேர பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகை ரூ.3,000-லிருந்து ரூ.4,000 ஆகவும், பகுதி நேர பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500-லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தி வழங்க இன்று (26.07.2023) அரசாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

eighteen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi