சென்னை: ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடக்கும் பாராட்டு விழாவில் முதல்வர் பங்கேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழும் மடிக்கணினியும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.