செங்கல்பட்டு: அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லிக்குப்பம் அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் உமா மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து செங்கல்பட்டு கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறி கருத்துகளை பதிவிட்டு வந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.